×

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

 

தொண்டாமுத்தூர், ஏப்.28:கோவை கணுவாய் டீச்சர் காலனியை சேர்ந்தவர் சோமு (எ) சோமசுந்தரம் (24). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா. இத்தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு மஞ்சுளா தனது 2 குழந்தைகளை அழைத்து கொண்டு வேறு ஒருவருடன் சென்று விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மனவேதனை அடைந்த சோமு குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.

மேலும் மனைவி, குழந்தைகளுடன் மாயமானது குறித்து நண்பர்கள், உறவினர்களிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார். நேற்று காலை இவரை வேலைக்கு அழைக்க வந்த நண்பர்கள், இவர் பெயர் சொல்லி அழைத்தும் வீட்டை விட்டு வெளியே வராததால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது விட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து சோமுவின் சகோதரி மகன் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thondamuthur ,Somu (A) Somasundaram ,Kanuvai ,Teacher Colony ,Coimbatore ,Dinakaran ,
× RELATED அமோக வெற்றியை தந்த தேக்கு மிளகு கூட்டணி: சாதித்த பெண் விவசாயி நாகரத்தினம்!